“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு”

“பொன் உள்ளத்திற்குப் பல்லாண்டு” என்ற தலைப்பில் எழுத்தாளரும், தமிழறிஞரும், இசை வல்லுனருமான பத்மபூஷன் திரு. பெ. தூரன் அவர்கள் அருட்செல்வரின் 50 ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு எழுதிய கட்டுரை. . . “நூறு இளைஞர்கள் வேண்டும். ஆர்வமும், எஃகு போன்ற மனவலிமையும் உள்ள நூறு இளைஞர்கள் இருந்தால் இந்த நாட்டை மிக விரைவிலே மாற்றி அமைத்து விடுவேன்” என்று வேதாந்தகேசரியாகிய சுவாமி விவேகானந்தர் முழங்கினார். அந்த வீர வாசகத்தைப் படித்ததும் இதோ ஓர் இளைஞர் இருக்கிறார் என்ற…

மனம் கவர்ந்த மகாலிங்கம்

பல ஆண்டுகளுக்கு முன் சென்னையில் சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்கு அருகில் ஒரு கார் பழுதடைந்து நின்றது, காரின் சொந்தக்காரர் எனக்குத் தெரிந்தவர். அவர் வழக்கமான புன்முறுவலுடன் வரவேற்றுப் பேசினார். இரண்டு இளைஞர்கள் காரைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரை, இவன்தான் என் மகன். என்ஜினீரிங் காலேஜில் படித்துக் கொண்டிருக்கிறான்.” என்று மிகப் பெருமையுடன் அறிமுகப்படுத்தினார். தமது ஒரே மகன் இன்று பேரும் புகழும் பெற்று விளங்குவதைக் கண்டால், அமரர் நாச்சிமுத்துக் கவுண்டர் அவர்கள் அளவற்ற பெருமையடைந்திருப்பார்.…